Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் இடிந்து வீழ்ந்த வீடு: தெய்வாதீனமாக உயிர் தப்பிய இருவர்

தமிழர் பகுதியில் இடிந்து வீழ்ந்த வீடு: தெய்வாதீனமாக உயிர் தப்பிய இருவர்

0

வவுனியா (Vavuniya) பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று உடைந்து வீழ்ந்த நிலையில் தெய்வாதீனமாக வசமாக இருவர் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவமானது, இன்று (19) இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் இன்று மதியம் கணவனும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர்,  இதன்போது வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்துள்ளது.

பாரிய அனர்த்தம்

வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்ததெனினும் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிறிநகர்பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராமமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version