Home இலங்கை சமூகம் வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

0

உயர்தர இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25)  நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளில் விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை: பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

தொழில் வளர்ச்சி முதலீடு

இதன்போது பிரதமரின் சீன விஜயம் குறித்து சீன மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு தனது நன்றியையும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் CASMCE சங்கத்தின் துணைத் தலைவர் Xu Xiang, கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version