Home உலகம் வியட்நாமை உலுக்கிய புயல்: 21 பேர் பரிதாப பலி

வியட்நாமை உலுக்கிய புயல்: 21 பேர் பரிதாப பலி

0

வியட்நாமின்  (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடமேற்கு பிலிப்பைன்ஸ் (Philippines) மற்றும் சீனாவை (China) தாக்கிய யாகி என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று (08) வியட்நாமை தாக்கியுள்ளது.

விமான நிலையங்கள்

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், மரங்கள் வேருடன் சாய்ந்து ஏராளமான மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் சுமார் 30 லட்சம் மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாகி புயலில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 176 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட சேதம் காரணமாக வியட்நாமில் 4 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/vietnam-typhoon-storm-21-dead-1725812648

NO COMMENTS

Exit mobile version