இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு அதனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என கூறியிருந்தார்.
மேலும், எந்தவொரு செல்வாக்கினாலும் கச்சத்தீவை மீளப்பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் முறுகலை ஏற்படுத்தவே ஜனாதிபதி இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் ஆய்வாளர் திபாகரன் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
