Home இலங்கை அரசியல் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளில் செல்வாக்கு மிக்கவர்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளில் செல்வாக்கு மிக்கவர்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்

0

புதிய இணைப்பு

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை
கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று பிற்கல் முன்னாள் கல்வி இராஜாங்க
அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா
மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த பரப்புரை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

முதலாம் இணைப்பு

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளிலே செல்வாக்கு மிக்கவர் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் (Jaffna) திருநெல்வேலி சந்தைப் பகுதியில் விஜயகலா மகேஸ்வரனால் (Vijayakala Maheswaran) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரச்சாரம் நடவடிக்கைகள் இன்று (7) காலை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் “நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது அதனை மீட்டெடுத்தார்.

விக்ரமசிங்க மிகப்பெரும் அரசியல்வாதி மிகவும் வலிமை வாய்ந்தவர் சர்வதேசநாடுகளிலே செல்வாக்கு மிக்கவர் அவர் இந்த நாட்டை நல்ல நிலைமையில் கொண்டு செல்வார்.

எனவே அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் தலைவர் பிரபாகரன் காலத்திலும் கூட அவர் நாட்டுக்கு பல்வேறு சேவைகளை செய்தவர் எனவே அவரை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

துண்டு பிரசுர விநியோகம்

மேலும்,  திருநெல்வேலி (Tirunelveli) சந்தை பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரி குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன் போது முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/vijayakala-supports-ranil-in-jaffna-rally-1725691685

NO COMMENTS

Exit mobile version