Home இலங்கை சமூகம் வெப்பமான வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

50 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version