Home இலங்கை சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்

0

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர்
சேகரிக்கும் வேலைத்திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடந்த
நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டதையடுத்து இந்த வேலைத்திட்டம்
விரிவுபடுத்தப்பட்டது.

அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு
வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர்
சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது.

விடுதலை நீர் சேகரிப்பு

அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில்
இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில்
சேமிக்கப்பட்டது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வானது நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில்
நடைபெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல்
ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின்
குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம்
மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version