Home தொழில்நுட்பம் இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

0

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 5 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும்.

குறைந்த விலையில் பழைய வாகனங்கள்: புதிய வர்த்தக மோசடி தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு 2027 – 2040 வரை கால அவகாசம் உள்ளது. 2035ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

2035ஆம் ஆண்டளவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI இன் வகிபாகம் முதன்மையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

MasterChef Australia போட்டியில் இலங்கை யுவதிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version