Home இலங்கை சமூகம் நிலவும் மழையுடனான காலநிலை: மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை: மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது 

இதற்கமைய, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் பரிதாப மரணம்

மழைவீழ்ச்சி 

அதேநேரம், குறித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் (29) பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழர் பகுதியில் சோகம்: மின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version