Home இலங்கை குற்றம் வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

வெலிக்கடை (Welikada ) பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (09) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/welikada-prison-officer-over-death-court-order-1744189830

NO COMMENTS

Exit mobile version