ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர நாட்டிற்கு வேறு வழியில்லை என்றும், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தார் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க(navin dissanayake) தெரிவித்தார்.
ஐ.தே.க.வின் பலாங்கொடை தொகுதி அமைப்பாளர் லசந்த விஜேரியாவின் ஏற்பாட்டில் பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மகத்தான வெற்றியை பெறுவார் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
தனது தந்தை உயிருடன் இருந்த போதும் இந்த நாடு வீழ்ச்சியடைந்த போதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சிதான் நாட்டை காப்பாற்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஆளுநராக வருவேன்
ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார் அதன் பின்னர் மீண்டும் ஆளுநராக நான் வருவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Source: https://ibctamil.com/article/when-ranil-wins-i-will-governor-again-navin-1723552326
