யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி
மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம்(7) காலை
வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் தொடரும் அனர்த்த நிலை நேரத்தில் யாழ்ப்பாண கடற்கரையில் திடீரென வெள்ளை நுரை கரை ஒதுங்கியது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
