Home இலங்கை குற்றம் மனைவி வெளிநாட்டில்.. கணவன் சடலமாக மீட்பு

மனைவி வெளிநாட்டில்.. கணவன் சடலமாக மீட்பு

0

வீ்டொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

களுத்துறையில், பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதனாகொடகம பிரதேசத்தில் உள்ள
வீ்டொன்றிலிருந்து நேற்று மாலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேருவளை, பதனாகொடகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார். 

மனைவி வேலை நிமித்தம் வெளிநாட்டில் 

இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார்
சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதால் அவர்
வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version