Home இலங்கை சமூகம் பதுளையில் தவறான முடிவெடுத்த பெண்

பதுளையில் தவறான முடிவெடுத்த பெண்

0

பதுளை (Badulla) பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பதுளை நமுனுகுல பிரதேசத்தை சேர்ந்த குறித்தபெண் நேற்று (04) தனது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், உயிரிழந்தவர் கனவரெல்ல தோட்டம் “CVE” பிரிவு, நமுனுகுல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம்

அந்தவகையில், குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மரணம் தொடர்பில் நமுனுகுல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நாட்டில் ஒவ்வொரு வருடமும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தவறான முடிவுகளால் இழக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version