யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் சிக்கி
யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(7) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி தாமதமாக வந்ததால் தொடருந்து புறப்பட ஆரம்பித்துள்ளது.
சிகிச்சை
இதன்போது, ஓடும் தொடருந்தில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை திடீரென கால் தடுக்கி விழுந்ததால் ஒரு
கால் தொடருந்தில் சிக்கியது.
இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் குறித்த யுவதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
