பூநகரி- சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்றையதினம்(12) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில், பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
விசாரணை
இதனையடுத்து, பெண்ணின் சடலத்தை
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம்
பார்வையிட்டு மேலதிக பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
