Home இலங்கை சமூகம் யாழில் இளம் யுவதி திடீர் மரணம்! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழில் இளம் யுவதி திடீர் மரணம்! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

0

யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில்
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (21) இடம்பெற்றுள்ளது.

இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த
சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யுவதி நேற்றையதினம் இரவு சாப்பிட்டுவிட்டு இருந்தபோது திடீரென
நெஞ்சுவலி ஏற்பட்டது.

இந்நிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

இதன்போது, இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version