Home இலங்கை சமூகம் பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் பரிதாப மரணம்

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் பரிதாப மரணம்

0

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (18.9.2024) அதிகாலை நாவலமுல்ல – மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மீகொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இவர் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தனியார் பேருந்து ஒன்றில் ஏறுவதற்கு முயன்ற போது பேருந்தின் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்து பேருந்தின் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விபத்தினை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி வேகமாக பேருந்தின் செலுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/women-death-in-road-accident-1726645369

NO COMMENTS

Exit mobile version