Home இலங்கை சமூகம் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி…..! மகன் கைது

மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி…..! மகன் கைது

0

புத்தளம் (Puttalam) பகுதியில் மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (26.10.2024) இரவு புத்தளம் தேத்தாப்பலை – கரம்பைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் தேத்தாப்பலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தவறுதலாக வீழ்ந்துபலி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும்
மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச்
சென்ற பொழுது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.

பின்னர் அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார்
சைக்கிளில் சென்ற பின்னரே தாய் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத்
திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.

பின்னர் தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில்
அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
சென்றுள்ளனர்.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

இதன்போது வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி தாய்
உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version