Home இலங்கை சமூகம் கொழும்பில் அதிகாலையில் நடந்த துயரம் – பேருந்தில் பலியான தாய்

கொழும்பில் அதிகாலையில் நடந்த துயரம் – பேருந்தில் பலியான தாய்

0

கொழும்பின் புறநகர் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலமுல்லை – மீகொட வீதியில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் ஏறச் சென்ற பெண் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் மரணம்

உயிரிழந்த பெண் மற்றுமொரு நபருடன் தனியார் பேருந்தில் ஏறிய போது ​​அதிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்துடன் சாரதி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

மீகொடதெனிய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version