Home இலங்கை குற்றம் வாடகை அறையில் வீசிய துர்நாற்றம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்

வாடகை அறையில் வீசிய துர்நாற்றம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்

0

இரத்தினபுரி, மீகாவத்தை பொலிஸ் பிரிவின் தெல்கொட பகுதியில் உள்ள விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மீகாவத்தை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரணத்திற்கான காரணம்

வாடகை அறையின் உரிமையாளர்கள் துர்நாற்றம் வீசியதால் தேடிய போது அறையில் பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் மீகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version