Home இலங்கை சமூகம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி

0

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மீண்டும் யாழ்தேவி தொடருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்தேவி தொடருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் உதவி

இந்நிலையில், இந்திய கடன் உதவியுடன் மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் வடக்கு தொடருந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

குறித்த தொடருந்து மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே புகையிரதம் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version