Home இலங்கை குற்றம் மனைவியுடன் பொலிஸ் நிலையத்தில் யோசித

மனைவியுடன் பொலிஸ் நிலையத்தில் யோசித

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியும் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

கொழும்பிலுள்ள இரவு விடுதிக்கு முன்னால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 21ஆம் திகதி இரவு யோஷிதவுடன் சென்ற ஒரு குழுவினருக்கும், இரவு விடுதி பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, முறுகல் நிலை ஏற்பட்டது.  

இதன்போது யோசிதவுடன் சென்று குழுவினரால் விடுதி பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version