Home இலங்கை சமூகம் வவுனியாவில் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம்

வவுனியாவில் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம்

0

வவுனியா (Vavuniya) – நந்திமித்திரகம பகுதியில் சிறுவன் ஒருவர் காதலிக்கு பயம்
காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது நந்திமித்திரகம பகுதியில் இன்று (30) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வவுனியா – போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கயிறு இறுகி மரணம்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த இரு தினங்களுக்கு முன் குறித்த சிறுவனை காணவில்லை என மாமடு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த சிறுவன் இன்றைய தினம் தூக்கிட்டு மரணித்த நிலையில்
நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

தனது 15 வயது காதலியை
மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் கயிறு இறுகி சிறுவன் மரணித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, சிறுவனின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உடற்கூற்று
பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடுவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/young-dead-body-rescued-in-vavuniya-1719756836

NO COMMENTS

Exit mobile version