யாழ்ப்பாணம் (Jaffna) – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி – அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே நேற்று (08) இவ்வாறுஉயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
