Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!

தமிழர் பகுதியில் இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!

0

வவுனியா- பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம்  உளுக்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலமானது இன்றையதினம் (16) இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று
உள்ளமை தொடர்பாக அப் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்றவர்களால் உளுக்குளம்
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா
விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் புதுவருட தினமான கடந்த 14 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக
அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ள நிலையில் பல்வேறு கோணங்களில்
உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version