Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் மாடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் மாடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

0

ம்ட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்க சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்று  (27) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வட்டவான் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞனுடன் 3 பேர் நேற்று (26) குறித்த பகுதியில் மாடு
மேய்க்கச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவதினமான இன்று மலம் கழிக்க சென்ற நிலையில் அவர்
அங்கு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version