Home இலங்கை குற்றம் யாழில் 18 வயதுடைய இளைஞன் கைது!

யாழில் 18 வயதுடைய இளைஞன் கைது!

0

யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் நேற்று(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம்
கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டுள்ளது.

 மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version