Home இலங்கை குற்றம் யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

0

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் இன்று(16) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version