முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாற்று பகுதியில் கஞ்சா பொதியினை கொண்டு செல்ல முற்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(17) முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடையார் கட்டு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 24 அகவை உடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் கைது
இதன்போது, இளைஞனிடமிருந்து ஒன்றை கிலோ கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
