Home இலங்கை குற்றம் வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

0

வவுனியா (Vavuniya) – தோணிக்கல் பகுதியில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (11) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய
தகவலையடுத்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞர் ஒருவர் 2 கிலோ
கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ,கைது செய்யப்பட்ட நபர் மேலதிக
விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version