Home இலங்கை குற்றம் யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் கைது

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் கைது

0

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் பெருமளவான
போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம்(20.04.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

விசாரணை

சந்தேகநபர் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version