Home இலங்கை சமூகம் யாழில் சோகம் – திடீரென உயிரிழந்த 29 வயது இளைஞன்

யாழில் சோகம் – திடீரென உயிரிழந்த 29 வயது இளைஞன்

0

யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாவற்குழி தெற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தேனுசன் (வயது 29)
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 1ஆம் திகதி மாலை
நெஞ்சுவலி ஏற்பட்டது.

மரண விசாரணை

இந்நிலையில் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை சாவகச்சேரி காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version