Home இலங்கை சமூகம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு

0

புத்தளம் (Puttalam) – நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (31) இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், தொழில் நிமித்தம் கடன்பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ள இளைஞர், அங்கு தொழில் கிடைக்காத நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

சடலமாக மீட்பு

இந்த நிலையில் நேற்று (31) காலை தனது பெற்றோர்களுடனும், இரண்டு சகோதரிகளுடனும் ஒன்றாக இருந்து உரையாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர், வீட்டின் மேல் மாடியில் தவறான முடிவு எடுத்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version