முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்று கொல்லப்பட்ட இளைஞனின் முகம் முழுவதும் காயங்கள் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட
முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025 அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு
காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக
மீட்கப்பட்டார்.
குறித்த சடலம் தொடர்பான உடல்கூற்றுப் பரிசோதனை இன்று(10.08.2025) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்கள், தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
