கனடா (Canada) செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த யாழ். இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். ஆரியகுளம் பகுதியில் இன்று (22.04.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்துள்ளார்.
இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு
அருகில் உள்ள காணியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
