Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

0

யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன்
கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள்
மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version