கொழும்பு 09 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 மாடிகளைக் கொண்ட குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றுப்புறக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
