புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மீன் சந்தைக்கு அருகில் நேற்று (10) இரவு ஏற்பட்ட கடுமையான தென்மேல் பருவக்காற்றின் தாக்கத்தால் கடலரிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியின் மேலும் ஒரு பகுதி கடலுக்குள் செல்லும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும், கடற்கரைக்கு அண்மையில் உள்ள வீதியும் கடலுக்குள் மூழ்கும் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக வேகத்துடன் கரையை தாக்கி வருவதால், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக கடலரிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வரும் உடப்பு பிரதேசத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, கடலரிப்பை தடுக்கும் பாதுகாப்பு கட்டமைப்புகளை அவசரமாக அமைத்து, மேலும் நிலப்பரப்புகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் கடலுக்குள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
