Home இலங்கை உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய மனு நிராகரிப்பு

உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய மனு நிராகரிப்பு

0
image

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) நிராகரித்துள்ளது.

மனு தொடர்பான சமர்ப்பிப்புகள் குறித்து விரிவாகப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் தனது முடிவை ‍அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/rejection-of-the-request-to-postpone-the-higher-education-exam-1784787280

NO COMMENTS

Exit mobile version