Home இலங்கை உள்நாட்டில் அதிகரிக்கும் வீட்டுப் பணியாளர்களின் தேவை: தொழிலாளர் உரிமைகள் குறித்து வலியுறுத்தல்

உள்நாட்டில் அதிகரிக்கும் வீட்டுப் பணியாளர்களின் தேவை: தொழிலாளர் உரிமைகள் குறித்து வலியுறுத்தல்

0
image

இலங்கையில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதனாலும், கணிசமானோர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதனாலும், உள்நாட்டில் வீட்டுப் பணிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐஎல்ஓ என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வீட்டுப் பணியாளர்களுக்குப் போதிய சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லாததன் காரணமாக, உள்ளூர் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக இணைவதற்குத் தயக்கம் காட்டுவதுடன், அது அவர்களை ஊக்கமிழக்கச் செய்துள்ளது.

எனவே இவர்களின் அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவது தற்போதைய சூழலில் மிக அவசியமானதாகும். அத்துடன், வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இந்தத் துறையை முறைப்படுத்துவதற்கும் அவர்களுக்கென, ஒரு தரப்படுத்தப்பட்ட சேவை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/rising-demand-for-domestic-workers-in-the-country-emphasis-on-workers-rights-1782019594

NO COMMENTS

Exit mobile version