Home இலங்கை மோடிக்கு அநுர வழங்கிய இலங்கையின் அதியுயர் விருது!!

மோடிக்கு அநுர வழங்கிய இலங்கையின் அதியுயர் விருது!!

0

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi), மாநில தலைவர்கள் மற்றும் அரசுத் தலைவர்களுக்கான இலங்கையின் மிக உயர்ந்த விருதான இலங்கை மித்ர விபூஷண விருதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கி வைத்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள அசைக்க முடியாத ஆதரவைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பல கூட்டு இந்திய-இலங்கைத் திட்டங்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கைத் திட்டங்கள்

அதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பல கூட்டு இந்திய-இலங்கைத் திட்டங்களை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்துள்ளனர்.

இந்த திட்டங்களில் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாய கிடங்கு மற்றும் இலங்கை முழுவதும் 5,000 மத நிறுவனங்களுக்கு சூரிய கூரை அமைப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஏப்ரல் 06, 2025 வரை மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may like this


https://www.youtube.com/embed/UfPHLc1ag2U

NO COMMENTS

Exit mobile version