Home இலங்கை எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

0
image

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கையில், 

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்தனர்.   

அதற்கமையவே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே 13 ஆம் திகதி தெரிவித்திருந்தார். 

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இருப்பினும், அரசாங்கத்தினால் ஒரு லீற்றர் டீசலுக்காக 100 ரூபா மானியம் செலவிடப்பட்டு, 392 ரூபா என்ற விலைக்கு மக்களுக்கு வழங்கப்படுவதன் மூலமும் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இதனை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/government-subsidy-for-fuel-ends-in-june-1781349163

NO COMMENTS

Exit mobile version