கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு காரணமாக இன்று (11) முற்பகலில் கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பில் வினவியபோது, குறித்த அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.
Source: https://samugammedia.com/sudden-computer-crash—password-distribution-affected-1786421031
