Home இலங்கை கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு

0
image

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

42 ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவை முன்னிட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத ஸ்தலங்களைப் பலப்படுத்தி, நல்லிணக்கம் மிக்க எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பௌத்தம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகமும், இஸ்லாமிய சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறையும் இதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இதற்கிடையில், 42 ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவை முன்னிட்டு “Welcome to Our Mosque” என்ற நல்லிணக்கத் திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் ஏனைய மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு முஸ்லிம் பள்ளிவாசலின் உள்வீட்டு கலாசாரம், வரலாறு மற்றும் மத வழிபாடுகளை நேரில் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கப் பெறவுள்ளது.

இது தொடர்பாக முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், பரஸ்பர புரிந்துணர்வு, கௌரவம் மற்றும் நட்புறவை வளர்த்துக்கொண்டு, ஐக்கியப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்பும் நல்லிணக்கப் பாலத்தை உருவாக்க அனைவரையும் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: https://samugammedia.com/10-million-rupees-government-funding-allocated-for-the-development-of-temples-in-kambaha-district-1787465684

NO COMMENTS

Exit mobile version