Home இலங்கை கல்முனையில் லொத்தர் கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம்; ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் படுகாயம்

கல்முனையில் லொத்தர் கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம்; ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் படுகாயம்

0
image

 கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம்; ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் படுகாயம்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த சிறிய ரக பட்டா (Vatta) வாகனம், தாழவட்டுவான் சந்தியை அண்மித்தபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக புகுந்து மோதியதுடன், பின்னர் தலைகீழாக புரண்டுள்ளது.

விபத்தில் லொத்தர் விற்பனை நிலையத்தின் தூண்கள் சேதமடைந்து, குறித்த கடை முழுமையாக சேதமடைந்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் விற்பனை நிலைய உரிமையாளரும் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 63 வயதான கமகே சுனில் சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர் லொத்தர் விற்பனை நிலைய உரிமையாளரான 56 வயதுடைய மூர்த்திதம்பி வேணு தாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/a-truck-crashed-into-a-lottery-shop-at-kalmunai-one-person-died-one-person-injured-1785734469

NO COMMENTS

Exit mobile version