தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம் இராணுவ முகாம் 221 ஆவது படைப்பிரிவு இணைந்து இன்று(20)குச்சவெளி பிரதான வீதி மற்றும் பாடசாலை வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
நுளம்பு மூலம் பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்த குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் செய்யப்பட்டது.
டெங்கு குடம்பிகள் பரவும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இதில் இராணுவ முகாம் இராணுவ படை வீரர்கள் பொது மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
