Home இலங்கை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

0
image

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

இந்த நீர்விநியோகத் தடையானது நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 

மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்துப் பகுதிகளில் இந்த நீர் விநியோகம் அமுலாகவுள்ளது. 

அத்துடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை,கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தடை அமுலாகவுள்ளது.

Source: https://samugammedia.com/12-hour-water-cut-in-several-areas-including-colombo-1783051933

NO COMMENTS

Exit mobile version