Home இலங்கை ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

0
image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து, ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (12) நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Source: https://samugammedia.com/special-discussion-between-the-president-and-the-bar-association-1786421845

NO COMMENTS

Exit mobile version