Home இலங்கை தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் 90 வது ஆண்டு நிறைவு நாளினை முன்னிட்டு கண்காட்சி!

தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் 90 வது ஆண்டு நிறைவு நாளினை முன்னிட்டு கண்காட்சி!

0
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் 90 வது ஆண்டு நிறைவு நாளினை முன்னிட்டு கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது 

இன்றைய கல்விக் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில்  வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் சம்பிரதாயபூர்வமாக கண்காட்சி கூடத்தை  திறந்து வைத்தனர்.

பாடசாலை அதிபர் கனகராசா சிவதாஸ்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம  விருந்தினராக வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன், சுசிலா நகை மாளிகை உரிமையாளர் சற்குண்ராசா  ரஜீந்திரன், கௌரவ விருந்தினர்களாக பருத்தித்துறை நகரபிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், உப தவிசாளர் இந்திரன், பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அயல் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கண்காட்சிகளை கண்டு கழித்தனர். குறித்த கண்காட்சி நாளை 12:00 மணிவரை இடம்பெறவுள்ளது.

Source: https://samugammedia.com/exhibition-to-mark-the-90th-anniversary-of-thumbala-sivaprakasa-vidyalaya-1780670820

NO COMMENTS

Exit mobile version